எனது கிளை

வெறுமையான எனது கிளை 
பறந்து வந்தமரும் உன் புன்னகையால் 


வீட்டுச்சுமை

வீடு சுமையென்றவனின் காலடியில் 
சுமையில்லை என்று நகர்ந்தது 
நத்தை வீட்டை சுமந்தபடி...


சூட்டுடம்பு


உடலுஷ்ண ங்கொண்டவனோ வாழ்நாள் முழுதும்
கடல்நஷ்ட ங்காணாத நீர்ப்போ லாங்கே
குடல்கஷ்ட ங்கொண்டு முகபோலிவு ங்கெட்டு
மடல்நஷ்ட ங்கண்ட கரிமலர்போ லாவான்



பெயர் கேட்கின்றேன்

காணும் அனைத்து பறவைகளிடமும் 
உன்னிடம் கேட்க மறந்ததால்.


பக்கம் வந்து பாவை நீ

வெக்கையெனும் வேதனை தான்
வித விதமா வந்தாலும்
துக்கமென்னும் துயரம் தான்
துடி துடிக்க வச்சாலும்
பல்வரிசை காட்டி நின்னா
வெக்கத்தில் அவையாவும்